News February 16, 2025

பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

image

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 9, 2025

BREAKING: தமிழ்நாட்டில் இந்த கட்சிகளுக்கு தடை

image

தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் உள்பட நாடு முழுவதும் 334 கட்சிகளை நீக்கி EC அறிவித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளை கண்டறிந்து அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் மக்கள் கட்சி, மக்கள் நீதி கட்சி, அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி, மீனவர் மக்கள் முன்னணி உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. வேறு எந்த கட்சிகளை நீக்க வேண்டுமென நினைக்கிறீங்க?

News August 9, 2025

தேவகவுடா ஃபார்முலாவை கையில் எடுக்கும் அன்புமணி?

image

60 MLA-க்கள் கிடைத்தால் பாமக ஆட்சியமைக்கும் என அன்புமணி பேசியது சாத்தியமா? கர்நாடகாவில் மாண்டியாவில் மட்டும் வலுவாக உள்ள JD(S) 37 சீட் மட்டும் வென்று ஆட்சியமைத்திருக்கிறது. அதுபோல, வட தமிழகத்தில் வலுவான தொகுதிகளை குறிவைத்து வென்றால், 2026-ல் தொங்கு சட்டசபை அமையும்பட்சத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது பாமக திட்டம். எதிர்பார்க்கும் சீட்கள் அதிகம் என்பதால் தவெகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளது.

News August 9, 2025

அப்பாவை நினைத்து கண்ணீர்விட்ட விஜய பிரபாகரன்

image

ரி-ரிலீஸாகும் கேப்டன் பிரபாகரன் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் தந்தை விஜயகாந்தை எண்ணி மேடையிலேயே விஜய பிரபாகரன் கண்ணீர் வடித்தார். நா தழுதழுக்க பேசிய அவர், தனக்கு MP பதவி எல்லாம் முக்கியமல்ல என்றும் விஜயகாந்தின் மகன் என்பதே முக்கியம் எனவும் உருக்கமாக குறிப்பிட்டார். தந்தையை மிஸ் பண்ணுவதாலேயே அவர் இறந்து ஓராண்டாகியும் அழுவதாக விஜய பிரபாகரன் பேசினார்.

error: Content is protected !!