News February 16, 2025
மனைவியுடன் வருண்குமார் ஐபிஎஸ் விவாகரத்து?

திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ், அவர் மனைவியும் காவல்துறை அதிகாரியுமான நந்திதாவை விவாகரத்து செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. அண்மையில்தான் வருண்குமாருக்கு டிஐஜி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்த சூழலில் இதுபோல் செய்தி பரவுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை, நாதகவினரால் பரப்பப்படும் வதந்தி என்று வருண்குமார் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 29, 2025
நம்மூரிலும் வந்தாச்சு ரோபோ காப்..!

போலீஸ் இல்லாத நேரத்தில் தனியாக போகும் போது, யாராவது பிரச்னை கொடுப்பாங்க என இனி பெண்களுக்கு பயம் வேண்டாம். வந்தாச்சு ரெட் பட்டன்-ரோபோட்டிக். சென்னையின் 200 இடங்களில் இவர்கள் களமிறக்கப்படவுள்ளனர். 24 மணி நேரமும் ஆன் டூட்டிதான். ஏதாவது பிரச்னை என்றால், இவரிடம் இருக்கும் ரெட் பட்டனை அழுத்தினால் போதும், காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவரிடம், வீடியோ கால் வசதியும் உண்டு.
News April 29, 2025
3-வது குழந்தைக்கு சலுகை வேண்டும்: MLA கோரிக்கை

3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக பர்கூர் MLA மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பின் போது பிரச்னை எழும் என சுட்டிக் காட்டி இந்த கோரிக்கையை அவர் சட்டமன்றத்தில் வைத்துள்ளார். ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.
News April 29, 2025
உற்பத்தி பாதிப்பு.. முட்டை விலை அதிகரிக்குமா?

நாமக்கல் மண்டலத்தில் வெயில் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் முட்டையிடும் கோழிகள் நாள்தோறும் உயிரிழந்து வருவதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோழிகள் உணவு உண்ணும் அளவும் குறைந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால், முட்டை விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ளது.