News February 16, 2025

தூத்துக்குடி பெற்றோர்களை குறிவைக்கும் சைபர் கும்பல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நூதன முறையில் சைபர் மோசடி நடைபெறுவதாக தகவல். மர்மநபர்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு கால் பண்ணி,’உங்கள் மகன்/மகளுக்கு ஸ்காலர்ஸிப் வந்துள்ளது; வங்கியில் மினிமம் ரூ.5000 இருந்தால், ஸ்காலர்சிப் கிடைக்கும்” என கூறுகின்றனர். இதைநம்பி ரூ.5000-ஐ வங்கியில் செலுத்தியவர்களிடம் OTP ஒன்றை அனுப்பி அந்த பணத்தை திருடுகின்றனர்.*உங்களுக்கு கால் வந்தால் 1930-ஐ(சைபர் கிரைம்) அழைக்கவும்

Similar News

News February 24, 2026

தூத்துக்குடி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

image

தூத்துக்குடி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 24, 2026

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; கோர்ட் அதிரடி

image

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் கடந்த 2024 ம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெயக்குமார் (38) என்பவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு 27 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 24, 2026

தூத்துக்குடி: துக்கம் தாளாமல் இளைஞர் தற்கொலை.!

image

நாசரேத் அருகே வெள்ளமடம் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த இளைஞர் ஜெயராஜ் (27). இவரது தந்தை ஆசீர் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ஜெயராஜ் அவர் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டின் அறைக்குள் ஜெயராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நாசரேத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!