News February 16, 2025
காங்கிரஸ் பிரமுகரிடம் சிபிசிஐடி விசாரணை

திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமாரின் மரண வழக்கு தொடர்பாக திருநெல்வேலி சிபிசிஐடி அலுவலகத்தில் காங்கிரஸ் பிரமுகர் குட்டம் சிவாஜி முத்துக்குமாரிடம் இரண்டரை மணி நேரம் நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் தனக்குத் தெரிந்த உண்மையான தகவல்களை கூறியுள்ளதாக சிவாஜி முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
BREAKING: நாங்குநேரி போலீசாருடன் தள்ளுமுள்ளு…!

நெல்லை, நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை வெட்டிச் சாய்த்த கொடூரம். பெரும்பத்து கிராம மக்கள் ஒன்று கூடி, நீதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
News March 3, 2026
நெல்லை : உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 3, 2026
நெல்லை செங்கோட்டை ரயில் பகுதி தூரம் ரத்து

நெல்லை ரயில் நிலையத்தில் 6வது நடை மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இன்று, நாளை மற்றும் 6ம் தேதி ஆகிய 3 தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் சேரன்மகாதேவியோடு நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.


