News February 16, 2025
ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுக்கு பதில் பணமா?

நாடு முழுவதும் ரேஷன் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணமாக தருவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேச்சு எழுந்ததாக கூறப்படுகிறது. அதில் பயனாளிகள் யார்? எவ்வளவு பணம் என்பதெல்லாம் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை உறுதியான முடிவை எடுக்கவில்லை.
Similar News
News March 11, 2026
சற்றுமுன்: சீமானுடன் இணைந்தார்

2026 தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழருக்கு ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழக சுன்னத் ஜமாத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. நிர்வாகிகளுடன் சேர்ந்து சீமானை நேரில் சந்தித்த கவுன்சிலின் மாநில தலைவர் அக்ரம் கான், 234 தொகுதிகளிலும் NTK வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.
News March 11, 2026
உங்க கனவில் பாம்பு வருதா.. இதுதான் அர்த்தம்

சிலருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகுதிசை, ராகுபுத்தி நடக்கும்போது அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
News March 11, 2026
பலாத்காரத்தால் 42 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்

நாட்டிலேயே முதல்முறையாக, 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த <<19352666>>ஹரிஷை<<>> கருணைக்கொலை செய்ய SC இன்று அனுமதி வழங்கியது. இதற்கு முன்பு நடந்த கருணைக் கொலை வழக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? 1973-ல் பாலியல் வன்கொடுமையால் கோமாவுக்கு சென்ற அருணாவை கருணைக்கொலை செய்ய அனுமதி 2011-ல் கோரப்பட்டது. அவர் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்தும், கோர்ட் அதை ஏற்கவில்லை. இறுதியில் 2015-ல் நிமோனியா காய்ச்சலால் அவர் இயற்கை மரணமடைந்தார்.


