News February 16, 2025
செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
JUST IN: திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கம்

திருவாரூர், வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் வெளியிட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பட்டியலில் 10,75,577 வாக்காளர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருந்த நிலையில், 9,46,097 பேர் வெளியிடப்பட்ட அறிக்கையில் வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,29,480 12.03% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
திருவாரூர்: டி.ஆர் பாண்டியனுக்கு சிறை தண்டனை நிறுத்திவைப்பு

திருவாரூர் மாவட்ட நீதிமன்றம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் டி.ஆர் பாண்டியன் அவர்களுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்து ஜாமின் கோரி இருந்ததை தொடர்ந்து, இன்று அவருக்கு விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
News December 19, 2025
திருவாரூர்: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


