News February 16, 2025
தெருநாய்கள் கடித்ததில் 10 பேருக்கு காயம்

அரூர் அருகே உள்ள உள்ளசக்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரின் வளர்ப்பு நாய் நேற்று இரவு அங்குள்ள பெண்கள், ஆண்கள் என 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்தது. இதில் சக்கிலிபட்டியை சேர்ந்ததீபா (46) உண்ணாமலை (42) பழனிச்சாமி (55) இந்துமதி (35) கல்யாணசுந்தரம் (60) ஆகியோருக்கு காயம் அதிகமாக ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 17, 2025
தர்மபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் தடை

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னா கரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பஞ்சாயத்துகள், காரிமங்கலம் 26, பாலக்கோடு 32 மற்றும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்ட ஹள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற 18, 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.16) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ஜீலான்பாஷா , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 16, 2025
தருமபுரி: டாஸ்மாக் கடையில் மயங்கி உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேருந்து நிலையம் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே ஒலபட்டி பகுதியை சேர்ந்த மாதையன் (65), மதுபோதையில் மயங்கி கிடந்தவரை பொதுமக்கள் புகாரில். கம்பைநல்லூர் போலிஸார் நேற்று மீட்டு, தருமபுரி GH-க்கு கொண்டு சென்றதில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


