News February 16, 2025
EPS எங்கு பதுங்கி உள்ளார்? செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News December 27, 2025
வாக்காளர்களை சேர்க்க 2 நாள்கள் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி, 75,000 பூத்துகளிலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ (அ) பெயரை நீக்கவோ படிவம் 7-ஐ பூர்த்திசெய்ய ECI அறிவுறுத்தியுள்ளது. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து TNSTC சார்பில் இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசியமயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த பஸ்கள், தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்படும். இதன் மூலம் பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம் என அரசு கூறுகிறது. இதுபற்றி பொதுமக்கள் 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News December 27, 2025
உயில் எழுதவில்லை என்றாலும் சொத்து கிடைக்கும்!

உயில் எழுதாத ஒரு இந்துவின் சொத்துகள், 3 நிலைகளில் பிரித்தளிக்கப்படுகிறது. முதல் நிலையில் இறந்தவரின் மகன், மகள், தாய் ஆகியோருக்கு சொத்து பங்கிடப்படும். முதல் நிலை இல்லாமல் இருந்தால், 2-ம் நிலையில் உள்ள சகோதர சகோதரிகள், மருமகன்கள், மருமகள்களுக்கு அளிக்கப்படும். இவை இரண்டும் இல்லாமல் இருந்தால், 3-ம் நிலையான தந்தையின் உறவினர்கள் (அ) தாயின் உறவினர்களுக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


