News February 16, 2025

டெல்லி நெரிசல்: பயத்தில் பயணிகள்…

image

டெல்லி ரயில் நிலையத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். கும்பமேளாவுக்காக பிஹாரின் சாப்ராவில் இருந்து ரயில் ஏற வந்த ஒரு பயணி, தாயை இழந்துள்ளார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி பலர் மயங்கியதாக அந்த பயணி கண்ணீர்விட்டபடி கூறினார். ரயில்கள் தாமதமும் நெரிசலுக்கு காரணம் என்கிறார் மற்றொரு பயணி.

Similar News

News January 12, 2026

இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

image

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!

News January 12, 2026

18 வருஷ வெயிட்டிங் ஓவர்! மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

image

1970-ல் கம்பீரமாக வலம் வந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாகவே இருந்தன! பஸ்சின் மேல்தளத்தில் வேடிக்கை பார்த்து பயணிக்கவே, சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுத்த காலமது! ஆனால், அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் சேவை நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று டபுள் டக்கர் பஸ் சேவையை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது.

News January 12, 2026

காங்கிரஸாரின் கருத்தை கேட்க முடியாது: அமைச்சர்

image

திமுக கூட்டணியில் காங்., மதில் மேல் பூனையாக இருப்பதாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு கருத்துகளை சொல்வார்கள்; அதையெல்லாம் கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணி நலன் குறித்து காங்கிரஸ் தலைவருடன் பேசி திமுக தலைவர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!