News February 16, 2025
திருச்சி ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு

திருச்சி ரயில்வே டி ஆர் எம் நிர்வாக அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் உறவினர்களை ஏற்றி விட வருகை தரும்போது பிளாட்பாரத்திற்குள் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் நபர் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது. டிக்கெட் இல்லாத பட்சத்தில் ரயில்வே சட்டப்படி ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Similar News
News August 22, 2025
திருச்சி: உதவி மைய எண்கள் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 0431-3524200, 83001 13000 என்ற டோல் ஃப்ரீ எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் சேவை, தெருவிளக்கு பழுதுகள், திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவிக்கலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
ஸ்ரீரங்கம் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

தமிழகத்தில் முக்கியமான 12 கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 22, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திருச்சியில் நாளை (ஆக.22) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது அரியமங்கலம் பிரகாஷ் திருமண மண்டபம், பாலகிருஷ்ணம்பட்டி பி.மேட்டூர் சமுதாயக்கூடம், லால்குடி சப்தகிரிவரர் கோவில் மண்டபம், துறையூர் ராஜ் திருமண மண்டபம், மண்ணச்சநல்லூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபம், மருங்காபுரி முத்தாழ்வார் பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.