News February 16, 2025

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு – 7 பணியிடங்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக உள்ள செவிலியர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். செவிலியர்கள் 5 காலியிடம், (MPHW) 2 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. ஷேர் செய்யவும்.

Similar News

News November 1, 2025

திருவண்ணாமலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (31.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

திருவண்ணாமலை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட அட்டவணை

image

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில், நவம்பர் மாத மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் கோட்ட அளவில் நடைபெற உள்ளன. வந்தவாசி – நவ.4ம் தேதி, செங்கம் நவ.6, போளுர் நவ.11, சேத்துப்பட்டு நவ.13, செய்யாறு நவ.18, திருவண்ணாமலை கிழக்கு நவ.20, ஆரணி நவ.25 , திருவண்ணாமலை மேற்கு நவ.27-ல் கூட்டம் நடைபெறும். அனைத்து கூட்டங்களும் காலை 11 மணியளவில் நடைபெறும் என மின்துறை தெரிவித்துள்ளது.

News October 31, 2025

தி.மலை: 12 படித்திருந்தால் போதும் – தேர்வு கிடையாது!

image

தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு, 12ம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து 15.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!