News March 29, 2024

21,000 ரவுடிகளை கண்காணிக்கும் போலீஸ்

image

தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் 21,000 ரவுடிகளை தனது கண்காணிப்பு வளையத்துக்குள் காவல்துறை கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் நடைபெறுகின்றன. இதில் பிரசாரம், வாக்காளர்களை மிரட்டுவது போன்ற செயலில் ரவுடிகள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக, 21,000 ரவுடிகளை கண்காணித்து வருகிறது.

Similar News

News December 29, 2025

கனிமொழியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

image

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கனிமொழி திருப்பூரில் நடைபெற்றுவரும் திமுக மகளிர் மாநாட்டில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 29, 2025

கில்லால் அனைத்து ஃபார்மெட் கேப்டனாக முடியாது: Ex வீரர்

image

சுப்மன் கில் திறமையான வீரர்தான், ஆனால் பல நேரங்களில் சோம்பேறித்தனமான ஷாட்களை அடிப்பதாக Ex ENG வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தீவிரமும், ஆக்ரோஷமும் அனைத்து ஃபார்மெட் போட்டிகளிலும் வெளிப்பட்டதாகவும், ஆனால் அதை கில்லால் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் கில்லால் அனைத்து ஃபார்மெட்களுக்கும் கேப்டனாக செயல்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

image

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

error: Content is protected !!