News February 16, 2025
கடலூர்: 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை

கடலூர் மாநகராட்சிக்கு ரூ.28.95 கோடி வரி பாக்கி உள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் வரி செலுத்தினால் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அனு தெரிவித்துள்ளார். சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் முதல் 30 நாட்களுக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
Similar News
News January 26, 2026
கடலூர்: தனியார் விடுதியில் இளைஞர் தற்கொலை

புவனகிரி வட்டம், மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (26). திருமணமான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் அப்பெண்ணுடன் தங்கியிருந்த ஹரிதாஸ் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.25) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 26, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.25) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


