News February 16, 2025
முரம்பு மண் கடத்தியவர் கைது லாரி பறிமுதல்

சோளிங்கர் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கருமாரியம்மன் கோயில் அருகில் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி மடக்கி சோதனை இட்டதில், அரசு அனுமதி இன்றி முரம்பு மண் கடத்திச் செல்வது தெரிந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, சாணமல்லூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News October 14, 2025
ராணிபேட்டை: 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்களா நீங்கள்?

ராணிபேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வரும் 17ம் தேதியன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News October 14, 2025
ராணிப்பேட்டை: கிரேட் எஸ்கேப்-ஆன தாசில்தார்!

ஆற்காடு அடுத்த புது மாங்காட்டில், அக்.11ல் நடத்த கிராம சபை கூட்டத்தில் 100 நாள் திட்ட பணிகளில் ஈடுபட்ட, 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை, முதல்வர் காணொலியில் பங்கேற்றனர். பின்னர் பணிக்கு திரும்பிய அவர்களின் வருகை பதிவை ஏற்றுக்கொள்ளாமல், அதிகாரிகள் கூலி வழங்க முடியாது என கூறியுள்ளனர். நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவ்வழியாக வந்த ஆற்காடு தாசில்தார் U TURN எடுத்தது சர்ச்சையாகியுள்ளது.
News October 14, 2025
ராணிப்பேட்டை: டிராக்டர் மோதி பள்ளி ஆசிரியை பலி

மிட்டப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சாந்தி(48), தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் மாணவிகளுடன் பள்ளியில் இருந்து மெயின் ரோட்டுக்கு நேற்று (அக்.13) பள்ளி நேரம் முடிந்து வந்து கொண்டிருந்தார். இவர்களுக்கு பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் ஆசிரியை சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் தலைமை ஆசிரியை செந்தாமரை மற்றும் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனை தாலுகா போலீசார் விசாரித்துவருகின்றனர்.