News February 16, 2025

கள்ளச்சாராய விவகாரத்தில் 2 பேர் கொலை: சீமான் காட்டம்

image

மயிலாடுதுறை கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியத்தால் தான் இருவர் கொல்லப்பட்டதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்விரோதம் காரணம் என போலீசார் விளக்கமளிப்பது வியப்பளிப்பதாகவும், முன்விரோதம் ஏற்படக் காரணமே சாராய விற்பனைதானே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என நினைத்தால் குற்றத்தை தடுக்க வேண்டும், காரணத்தை மறைக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 5, 2026

இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா?

image

இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இதனால், ஈரானுக்கு எதிராக இந்திய துறைமுகங்களை USA பயன்படுத்துவதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர் குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தவறான தகவல் பரப்பியதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

News March 5, 2026

மார்ச் 5: வரலாற்றில் இன்று

image

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்

News March 5, 2026

‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

image

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

error: Content is protected !!