News February 16, 2025
மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

ஈரோடு ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த அலாவுதீன் (31). இவா் ஈரோட்டில் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அலாவுதீன் பணியாற்றும் பள்ளியில் +2 படிக்கும் 17 வயது மாணவரின் கைப்பேசிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, தனிமையில் சந்திக்குமாறு அழைப்பு விடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெற்றோர்கள் புகார் கொடுக்க, போலீஸ்சார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனார்.
Similar News
News January 17, 2026
தமிழ்நாட்டில் ஈரோடு முதலிடம் பிடித்தது!

தமிழ்நாட்டில் நேற்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தினசரி மாலை தொடங்கி மறுநாள் காலை வரை குளிர் வாட்டுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 32.6 டிகிரி செல்சியஸ் வெயில் (90.68 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.
News January 17, 2026
ஈரோடு: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

ஈரோடு மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 17, 2026
ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


