News February 16, 2025
NTPCஇல் வேலைவாய்ப்பு.. உடனே APPLY

தேசிய அனல்மின் நிலையத்தில் (NTPC) 400 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அவை அனைத்தும் அசிஸ்டென்ட் எக்ஸிக்யூட்டிவ் நிலையிலான பதவிகள். விண்ணப்பப்பதிவு தேசிய அனல்மின் நிலைய இணையதளமான ntpc.co.in.இல் நேற்று தொடங்கியது. வேலைக்கான கல்வித் தகுதியாக பி.இ., பி.டெக் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச் 1 கடைசி நாள். இந்தத் தகவலைப் பகிருங்கள்.
Similar News
News August 23, 2025
காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி?

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை காங்., தீவிரமாக எடுத்து வருகிறதாம். அதன் பின்னணியில் TVK கூட்டணியில் 70 தொகுதிகள், DCM பதவி ஆஃபர் இருப்பதாக கூறப்படுகிறது. 1989-ல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்ற காங்., அந்த தொகுதிகளையும், 2-வது இடம் வந்த தொகுதிகளையும் கேட்க உள்ளதாம். DMK கூட்டணியில் உள்ள காங்., தலைவர்கள் அண்மை காலமாக ஆட்சியில் பங்கு கோரிக்கையை தீவிரமாக பேசி வருவது கவனிக்கத்தக்கது.
News August 23, 2025
இலங்கை முன்னாள் அதிபர் ஹாஸ்பிடலில் அட்மிட்

முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய வழக்கில் ரணில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆக.26 வரை ரிமாண்டில் வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு BP, சர்க்கரை அதிகரித்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது கொழும்பில் உள்ள நேஷனல் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News August 23, 2025
ராகுல் தான் நாளைய PM: செல்வப்பெருந்தகை பதிலடி

நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், ராகுல் ஒருபோதும் பிரதமராக முடியாது என அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இம்மாதிரியான கருத்துக்கள் ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.