News February 16, 2025

அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

image

வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News October 31, 2025

செங்கல்பட்டு காவல் துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

செங்கல்பட்டு காவல் துறை இன்று (அக்.31) வாகன ஓட்டிகள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓரத்தில் நிறுத்த வேண்டாம், மேலும் இரவு நேரங்களில் வண்டிகளை பார்க் செய்யும் போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இது முக்கியமான எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 31, 2025

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

மீண்டும் உற்பத்தியை துவங்கும் போர்ட் நிறுவனம்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் உள்ள போர்டு தொழிற்சாலையில் மீண்டும் கார் எஞ்சின்கள் உற்பத்தியை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (அக்டோபர் 31) தலைமை செயலகத்தில் கையெழுத்தானது. ரூபாய் 3,250 கோடி மதிப்பீட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனத்தால் 1,000-திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!