News February 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மே மாதத்திற்குள் புதியவர்கள்

1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மேலும் சிலர் புதிதாக இணைய காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மே மாதத்திற்குள் புதியவர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 23, 2025
திருமா – ராமதாஸ் சீக்ரெட் மீட்டிங்?

திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தைலாபுரத்திற்கே சென்று திருமா, ராமதாஸை சந்தித்ததாக தகவல்கள் கசிகின்றன. இச்சந்திப்பில் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு தடை போடமாட்டேன் என திருமா சொன்னதாகவும், பாமகவை பிளவுபடுத்தும் பாஜகவின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில், திருமா இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News August 23, 2025
இளமை திரும்புதே… பேட்ட வேலனுடன் மங்களம்!

ரஜினியை போயஸ் கார்டனில் அவரது வீட்டில் சந்தித்தார் சிம்ரன். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், சில சந்திப்புகள் பொன்னானவை என்றும், சூப்பர் ஸ்டாருடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சி எனவும் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். ‘கூலி’, ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இனிமையாக்கி உள்ளதாகவும் அவர குறிப்பிட்டுள்ளார். பேட்ட ரஜினி, சிம்ரன் காம்போ யாருக்கெல்லாம் பிடிக்கும்?
News August 23, 2025
வாரத்தில் ஒருநாள் சோம்பேறியா இருங்க!

இன்றைய நவீன காலத்தில் எப்போது பார்த்தாலும் மன அழுத்தமாக இருக்கிறது என்று புலம்புபவர்கள் அதிகம். ஆனால், வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக சோம்பேறியாக இருந்தால் மன அழுத்தம் குறையுமாம். அதுமட்டுமல்லாமல், ரத்த அழுத்தம் சீராகி, மனநலம் மேம்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஓய்வு எடுப்பது நேரத்தை வீணடிப்பதல்ல; அது படைப்பாற்றலை அதிகரித்து, கவனத்தை கூர்மையாக்கி உழைப்புத் திறனையும் அதிகரிக்கிறதாம்.