News February 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மே மாதத்திற்குள் புதியவர்கள்

1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மேலும் சிலர் புதிதாக இணைய காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மே மாதத்திற்குள் புதியவர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 7, 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
மகளிர் வங்கி கணக்கில் ₹15,000.. அதிரடியாக அறிவித்தார்

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க தாய்மார்களுக்கு ₹15,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அண்ணன் சீர் திட்டத்தில் திருமணத்தின்போது பெண்களுக்கு 1 சவரன் தங்கம், பட்டு சேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
₹2,500 மகளிர் உரிமைத் தொகை.. விஜய் தேர்தல் வாக்குறுதி

தவெக சார்பில் நடைபெற்றுவரும் மகளிர் தின நிகழ்ச்சியில், பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். அதில், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித் தொகை ₹2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், அரசு ஊழியர்களை தவிர மற்ற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் விஜய் உறுதி அளித்துள்ளார்.


