News February 15, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அதிக ரன்கள் குவித்த வீரர் தெரியுமா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் அதிகபட்சமாக 791 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 2ஆவதாக இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே (742 ரன்கள்), 3ஆவதாக இந்தியாவின் தவான் (701), 4ஆவதாக இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா (683), 5ஆவதாக இந்திய முன்னாள் வீரர் கங்குலி (665) ஆகியோர் உள்ளனர். கோலி (529) 11ஆவது இடத்திலும், ரோஹித் (481) 14ஆவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News March 24, 2026
பாஜகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது: உதயநிதி

தமிழ்நாட்டில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவின் சூழ்ச்சி இங்கு வெற்றி பெறாது என்று DCM உதயநிதி ஸ்டாலின் தெரித்துள்ளார். கோவை இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பாசிச பாஜகவை துணிச்சலாக எதிர்த்து நிற்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்; 4 அடிமைகளைப் பிடித்து வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது நுழைந்துவிடலாம் என்று பாஜக நினைக்கிறது, அது என்றுமே நடக்காது என்றார்.
News March 24, 2026
அதிமுக மீது ஜி.கே.வாசன் அதிருப்தி

பாஜக, பாமக, அமமுக ஆகிய NDA கூட்டணி கட்சிகளுக்கான <<19456028>>தொகுதி பங்கீடு<<>> ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அந்நிகழ்வில் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதே கூட்டணியில் 2021-ல் த.மா.க. 6 இடங்களில் போட்டியிட்டது. தற்போது 8 சீட் கேட்கப்பட்டதாகவும், 4 மட்டுமே அதிமுக தர தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக 6 சீட் வேண்டும் என்று திட்டவட்டமாக உள்ளனர்.
News March 24, 2026
அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்

2026 தேர்தலில் தவாகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். வேல்முருகனை சந்தித்த அவர், கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அவர், திடீரென தவாக பக்கம் தாவியுள்ளார். முன்னதாக, தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.


