News February 15, 2025

மனைவி சாம்பலில் மண்பானை: சிலிர்க்க வைக்கும் காதல்

image

உயிரிழந்த மனைவியின் நினைவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் சீனக் கணவர் பியோ. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையின்படி சாம்பலை களிமண்ணில் கலந்து மண்பானையாக வடிவமைத்துள்ளார் பியோ. தான் இறந்ததும், அதில் தனது உடைமைகளை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என வாரிசுகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். காதல் என்றும் அழியாது!

Similar News

News January 13, 2026

ஜனவரி 13: வரலாற்றில் இன்று

image

*1915 – இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர். *1949 – இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா பிறந்தார். *1964 – கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். *1993 – கெமிக்கல் ஆயுத தயாரிப்பை தடை செய்யும் உடன்படிக்கையில் பல நாடுகள் கையெழுத்திட்டன. *2014 – பழம்பெரும் தமிழ் நடிகை அஞ்சலிதேவி காலமானார்.

News January 13, 2026

ELECTION: மீண்டும் கோவையில் களமிறங்குகிறாரா கமல்?

image

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாம். கடந்த முறை போலவே கமல்ஹாசன் மீண்டும் கோவை தொகுதியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், மநீம வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்கின்றனர் திமுகவினர்.

News January 13, 2026

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மர்ம கோயில்!

image

ம.பி.,யில் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் கோட்டையில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் ஒன்று உள்ளது. இது ஆண்டுக்கு ஒருமுறை மகர சங்கராந்திக்கு மட்டும் திறக்கப்படும். இங்கு நிரந்தர சிலைகள் இல்லை. இந்த கோயில் அமைந்துள்ள கோட்டையில் சீல் வைக்கப்பட்ட பல ரகசிய சுரங்கங்கள் உள்ளன. இரவு நேரங்களில் தாந்திரீக சடங்குகளை செய்ய பலர் இக்கோட்டைக்கு செல்வதாக கூறப்படுவதால் மர்மமான கோயிலாக இது உள்ளது.

error: Content is protected !!