News March 29, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களுக்கு அழைப்பு

image

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் வருகிற (ஏப்ரல்) 2-ந் தேதி காலை 6.30 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீச்சல் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் 12 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக்கு ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 27, 2026

கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

கடலூர்: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

கடலூர்: பொதுத்தேர்வு; 250 பறக்கும் படை நியமனம்!

image

கடலுார் மாவட்டத்தில் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30,039 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் 31 வழித் தட அலுவலர்களும், 129 முதன்மை கண்காணிப்பாளர்கள், 7 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர் 129, 7 கூடுதல் துறை அலுவலர்கள், 2,100 அறை கண்காணிப்பாளர், 250 நிலைப் படை, பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!