News February 15, 2025
ICC CT 2025: துபாய் புறப்பட்ட இந்திய அணி

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக ரோகித் ஷர்மா தலைமையிலான அணி, மும்பையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது. விராட் கோலி, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் உடன் சென்றனர்.
Similar News
News August 14, 2025
உங்களுக்கு high BP இருக்கா? இதை தவிருங்கள்

உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு (high BP) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: காஃபி -இதிலுள்ள கஃபைன் BP-யை அதிகரிக்கும் *சர்க்கரை -உடல்பருமன், BP-யை அதிகரிக்கும் *பதப்படுத்தப்பட்ட இறைச்சி – இதில் உப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் BP உயரும் *பீநட் பட்டர் – இது கொழுப்பை அதிகரித்து BP-யை உயர்த்தும் *மைதா பிரெட் *உப்பு – அதிகமானால், BP உயரும். ஆக, தினசரி 3 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம்.
News August 14, 2025
ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க முடிவு?

டிரம்ப் – புடின் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் அதிக தள்ளுபடியில் விற்கப்படுகிறது. இதனால், டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியிலும், ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, தள்ளுபடி குறைந்ததால் எண்ணெய் வாங்குவதை பொதுத்துறை நிறுவனங்கள், கடந்த மாதம் நிறுத்தி இருந்தன.
News August 14, 2025
அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிவு: கவர்னர்

TN-ல் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருவதாக RN ரவி கூறியுள்ளார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள உரையில் வேலைவாய்ப்பின்றி வெறும் படிப்புச் சான்றிதழ்களை பெற்றவர்களாக மாணவர்கள் திகழ்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆன பிறகும் பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து?