News February 15, 2025
335 கிராமங்களில் பதிவு செய்யும் முகாம் – ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 335 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பெயர் பதிவேடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் நில உடமை பதிவுகள் சரி பார்த்துக் கொள்ளும் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் விவசாயிகள் பயன் பெற இயலும். விவசாயிகள் இதில் பதிவு செய்வது அவசியம் என்றார்.
Similar News
News November 15, 2025
நெல்லை: மகனை இழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

களக்காடு அருகே சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் அபின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஆறுமுக பெருமாள் மன வேதனையுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சவளைக்காரன் குளம் இடுகாட்டில் உள்ள தனது மகனின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
News November 15, 2025
நெல்லை: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவன்

மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நெல்லை, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஊ.லெபின் சுதர்ஷன் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். அவரை தலைமை ஆசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி. வகுப்பு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.
News November 15, 2025
ஆசிரியர் தகுதி தேர்வு: 9.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் 15 மற்றும் 16ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன தேர்வு காலை 9.30 மணிக்கு மேலாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வு பனியில் சுமார் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


