News February 15, 2025

சிறுவனின் இறப்புக்கு நோயின் தன்மையே காரணம் – அமைச்சர்

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது சிறுவன் மருத்துவ உதவியாளர் ஊசி போட்டதால் உயிரிழந்ததாகவும் மேலும் போதிய மருத்துவர்கள் இல்லாதது அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சிறுவன் இறப்புக்கு காரணம் நோயின் தன்மையே என தெரிவித்தார்.

Similar News

News November 15, 2025

நெல்லை: 10th முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை உறுதி!

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News November 15, 2025

நெல்லை: மகனை இழந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

image

களக்காடு அருகே சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் அபின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் ஆறுமுக பெருமாள் மன வேதனையுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சவளைக்காரன் குளம் இடுகாட்டில் உள்ள தனது மகனின் கல்லறையில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News November 15, 2025

நெல்லை: பதக்கங்களை குவித்த அரசுப் பள்ளி மாணவன்

image

மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற நெல்லை, வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஊ.லெபின் சுதர்ஷன் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார். அவரை தலைமை ஆசிரியர் டேனியல் கிப்சன், பொறுப்பாசிரியர் இராஜேஷ்வரி. வகுப்பு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.

error: Content is protected !!