News March 29, 2024

பஸ் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து பஸ்களிலும் ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்றப்படுவது ஆய்வின் போது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 7, 2026

சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ வழக்கு

image

விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன்(28). இவர் 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு சிதம்பரம்அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி நல்லூர் ஊர்நல அலுவலர் மணிமேகலைவிருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அருள்முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News March 7, 2026

வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

image

பண்ருட்டி பகுதியில் வாட்ஸ்அப்பில் குழுக்கள் உருவாக்கி அதன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது செல்போனில் வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்ற
திருவதிகையை சேர்ந்த திருநாவுக்கரசு சிவா(59), பண்ருட்டி பனங் காட்டு தெரு பன்னீர்செல்வம்(56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News March 7, 2026

மஞ்சக்குப்பம்: தூக்கத்தில் உயிரிழந்த இளைஞர்

image

கடலூர் துறைமுகத்தை சேர்ந்தவர் வினோத்(37). இவர் நேற்று முன்தினம் இரவு மஞ்சக்குப்பத்தில் உள்ள தனது சித்தி உத்ரா(47), வீட்டிற்கு வந்து தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுப்பியபோது, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். உடனே கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!