News February 14, 2025
சிறுமி பாலியல் வன்புணர்வு: வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்

இணையம்புத்தம்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுதன்(32). இவர் 14 வயது மாணவி ஒருவரை பெங்களூர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தரையா இன்று சுதனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Similar News
News April 24, 2025
பிளஸ் டூ மாணவர்களுக்கான தனித்துவப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு குமரி மாவட்டத்தில் ஏப்.29,30 தேதிகளில் நடக்கிறது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்று அதில் அவர் கூறி உள்ளார். *ஷேர்
News April 24, 2025
ப்ளாக் பெல்ட் வாங்கிய மாணவனை பாராட்டிய எம்எல்ஏ

பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூள்ளுர்துறை கிராமத்தை சேர்ந்த செல்வன். செ. தர்ஷன் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருப்பு பெல்ட் (Black belt), ஒரு நிமிடத்தில் 10 விரல்கள் மூலம் 57 புஸ்அப்ஸ் (Push Ups) செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். அவரை ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.
News April 23, 2025
ஒரே நாளில் 116 பேர் அதிரடி இடமாற்றம் எஸ் பி நடவடிக்கை

தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் ஆகிய பகுதிகளை தலைமையிடமாககொண்டு நெடுஞ்சாலை ரோந்து படை செயல்படுகிறது. காவல் நிலையம் நெடுஞ்சாலை ரோந்து ஆயுதப்படை என 69 போலீசார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் 47 பேர் என நேற்று ஒரே நாளில் 116 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.