News March 29, 2024
ரூ.1.05 கோடி உண்டியல் காணிக்கை

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நிறைவடைந்ததையடுத்து கோயில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் ரா.மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோயில் துணை ஆணையர் சு.சுவாமிநாதன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு 96 ஆயிரம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.
Similar News
News April 20, 2025
தாளவாடி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வயர்மேன் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தாளவாடி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News April 20, 2025
ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <
News April 20, 2025
திருமண தடை நீக்கும் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர்

ஈரோடு, கோனார்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை, நில பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு,தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.