News February 14, 2025

மதுரை மாநகராட்சி ஆணையர் விசாரணை

image

மதுரை மாட்டுத்தாவணி நக்கீரன் நுழைவாயில் இடிக்கும் பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கட்டிடத்தை இடிப்பதற்கு முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மதுரை மாநகராட்சி ஆணையர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News

News August 21, 2025

மதுரை அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

மதுரை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

image

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 21, 2025

மதுரையில் விஜய் போட்டியா..?

image

மதுரையில் தவெகாவின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வௌியிட போகிறேன் என கூறிய விஜய், மதுரை கிழக்கு என ஆரம்பித்து மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவேன் என்று சொல்லி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.

error: Content is protected !!