News February 14, 2025
ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் ரூ.58.26 லட்சம் காணிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நேற்று திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவல் குழுவினர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் உள்ள காணிக்கைகள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் எண்ணப்பட்டன. அந்த உண்டியல்களில் ரூ.58 லட்சத்து 26 ஆயிரத்து 592 ரொக்கம், 43 கிராம் தங்கம், 222 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 7, 2025
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
வியாபார தடையை நீக்கும் பஞ்சமுக விநாயகர்

நாமக்கல், பரமத்தி வேலூரின் மையப்பகுதியில் 1992ம் ஆண்டு கட்டப்பட்ட பஞ்சமுக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் ஆன 12 அடி உயர சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு 5 முகங்களுடன் கூடிய விநாயகர் பஞ்சமுக விநாயகராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருமணத் தடை (ம) தொழில் தடை இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தேங்காயில் விளக்கு ஏற்றி பிராத்தனை செய்துக் கொண்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
News September 7, 2025
நாமக்கல்: PHONE காணவில்லையா உடனே செய்யுங்க!

நாமக்கல் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <