News February 14, 2025
2 நாட்களுக்கு வரி வசூல் கிடையாது

சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் உள்ள யுடிஐஎஸ் மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான பராமரிப்பு பணிகள் நாளை முதல் நாளை மறுநாள் வரை (பிப்.15,16) நடைபெறும். இதனால் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும் வரிவசூல் பணிகள் மற்றும் வரி செலுத்தும் அனைத்து சேவைகளும் இன்றிரவு 8 மணி முதல் வரும் 16ம் தேதி தற்காலிகமாக இயங்காது என கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Similar News
News August 6, 2025
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத் தொகை

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் அரசு வழங்கும் முதிர்வுத் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் இதற்கு பதிவு செய்து 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களின் பெற்றோர், 91500-56926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இன்று தெரிவித்தனர்.
News August 5, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 5, 2025
கோவை: கடன் தொல்லை நீக்கும் கால சம்ஹார பைரவர்!

கோவை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.