News February 14, 2025

பொதுத்தேர்வு பணியில் 40,000 ஆசிரியர்கள்: அன்பில் மகேஷ்

image

தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வின் போது தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 மாணவ, மாணவியரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 பேரும் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Similar News

News February 19, 2025

பரங்கிக்காயில் பல்லாயிரம் மருத்துவ குணங்கள்!

image

*பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகமுள்ளதால் கண்களுக்கு நல்லது.
*ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை பரங்கிச்சாறு போக்கும்.
*பரங்கிச்சாறோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பரங்கிக்காய் போக்கும்.
*ரத்த சோகையை குணப்படுத்தும் பண்பு பரங்கிக்காயிடம் உண்டு.

News February 19, 2025

மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

image

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள சூழலில், மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இந்த கையெழுத்து இயக்கம் மூலம், குழந்தைகளுக்கு விருப்பமான 3ஆவது மொழி எது என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக NEPஐ செயல்படுத்தாமல், அந்த நிதியை தமிழகத்திற்கு தர முடியாது என தர்மேந்திர பிரதான் பேசியிருந்தார்.

News February 19, 2025

உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: CM ஸ்டாலின்

image

TN உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் #SaveTNRights என்ற ஹேஷ் டேக்கையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!