News February 14, 2025
பொதுத்தேர்வு பணியில் 40,000 ஆசிரியர்கள்: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வின் போது தினசரி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8,21,057 மாணவ, மாணவியரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8,23,261 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,13,036 பேரும் எழுதவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Similar News
News September 11, 2025
மீண்டும் சரிந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(செப்.11) சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 81,217 புள்ளிகளிலும், நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 24,945 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. ICICI Bank, Dr Reddys Labs, Hero Motocorp உள்ளிட்ட முக்கிய நிறுவங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
News September 11, 2025
7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன்: குல்தீப் கம்பேக்

ஆசிய கோப்பை தொடரில், தனது முதல் போட்டியை இந்தியா அதிரடியாக துவங்கியுள்ளது. குறிப்பாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் மிரட்டிவிட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். எனவே, அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கி.,க்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 11, 2025
மூலிகை: இது தெரிஞ்சா, துத்தி இலையை அள்ளி சாப்பிடுவீங்க!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*துத்தி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் தசைகளை வலுப்பெறும்.
*துத்தி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்தால் ஈறுகளின் ரத்தப்போக்கு நீங்கும்.
*துத்தி இலைகளை நெய்யில் சாதத்துடன் சேர்த்து, 40- 120 நாட்கள் சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
*துத்தி பூக்களை உலர்த்தி, நீரில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். SHARE IT.