News February 13, 2025

கிராமப்புற பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி

image

கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் ட்ரோன் பயன்படுத்த மத்திய அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது, பயிற்சி அளித்தது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில்,  கிளார் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பயிற்சி அளிகப்பட்டு, ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இக்குழுவை 8248716615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 13, 2025

காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <>இணையதளத்தில்,<<>> உங்கள் EPIC எண்ணை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். ஏதாவது புகார் இருந்தால் அதே இணையதளத்தில் உள்ள அதிகாரிகளை (ERO/BLO) தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

APPLY NOW: காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் 49 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <>இணையதளத்தில்<<>> வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9043046100 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

காஞ்சிபுரத்தில் 9,747 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

image

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை காஞ்சிபுரத்தில் 9,747 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் தொற்றால் 1 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

error: Content is protected !!