News March 29, 2024
ஏன் இந்த ஓரவஞ்சனை?

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.
Similar News
News November 1, 2025
MP கார்த்தி சிதம்பரத்துக்கு வந்த சிக்கல்!

INX மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ₹16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ₹7 கோடி பணத்தையும் முடக்கி ED நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் PMLA தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிவில், சொத்துகளை முடக்கிய ED நடவடிக்கை செல்லும் என்று கூறி, கார்த்தி சிதம்பரத்தின் வாதத்தை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
News November 1, 2025
அதிசயமே அசந்து போகும் அழகி ஐஸ்வர்யா ராய்!

8-வது உலக அதிசயம் என கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று பிறந்தநாள். 1994-ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட அவர், சினிமாவிலும் உச்சம் தொட்டார். அழகான ஹீரோயினாக மட்டுமின்றி, ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தையும் இத்தனை தேஜஸுடன் நடிக்க முடியும் என பொன்னியின் செல்வன் படத்தில் நிரூபித்து காட்டி, ரசிகர்களை அசத்தினார். உங்களுக்கு பிடிச்ச ஐஸ்வர்யா ராய் படம் எது?
News November 1, 2025
வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.


