News February 13, 2025

நாளை முதல் பாஸ்போர்ட் முகாம் துவக்கம்

image

சென்னை மண்டல கடவுச் சீட்டு அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) முதல் 2 வாரங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு மாற்று நாள்களிலும் கடவுச் சீட்டு முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் https:///www.passportindia.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 17, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

கிருஷ்ணகிரி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை

image

கிருஷ்ணகிரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 16, 2025

விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!