News February 13, 2025
8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: தவெக நிர்வாகி கைது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739435245989_1241-normal-WIFI.webp)
விழுப்புரம் அருகே காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவெக சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளரின் மைத்துனரும், நரசிங்கராயன்பேட்டை பொருளாளருமான சரவணன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News February 13, 2025
பீர் பாட்டிலில் ‘மகாத்மா காந்தி’ புகைப்படம்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739447552250_1204-normal-WIFI.webp)
ரஷ்யாவின் ‘பிராண்ட் ரிவார்ட்’ மதுபான நிறுவனம் தயாரிக்கும் பீர் கேனில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராக போராடி வந்த ஓர் ஒப்பற்ற தலைவனின் புகைப்படத்தை பீர் கேனில் வைப்பது எத்தகைய குரூரமான மனப்பான்மை? இதில் இந்தியா உடனடியாக தலையிட்டு, அந்த மதுபான ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
News February 13, 2025
மொபைல் ப்ரீபெய்டு கட்டணம் மீண்டும் உயருகிறது?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736858243275_887-normal-WIFI.webp)
ஜியோ, ஏர்டெல், வோடாபோன் இந்தியா ஆகியவை கடந்த ஜூலை மாதம் ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை கணிசமாக உயர்த்தின. இந்த நிலையில், வோடாபோன் இந்தியா நிறுவனம் தற்போது அதிக செலவீனத்தை சமாளிக்கவும், தரமான சேவை அளிக்கவும் கட்டணத்தை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது. ஒரு நிறுவனம் கட்டணம் உயர்த்தினால், மற்றவையும் அதை பின்பற்றும்.
News February 13, 2025
வார இறுதி விடுமுறை.. 627 சிறப்பு பஸ்கள் இயக்கம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736455174216_1153-normal-WIFI.webp)
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 627 சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை, நாளை மறுநாள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாள்கள் சிறப்பு பஸ்களை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 485, கோயம்பேட்டில் இருந்து 102, மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பஸ்கள், மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.