News March 29, 2024
மலேசியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஆசிய கூடைப்பந்து தொடரின் பிரதான சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. சிங்கப்பூரில் ஆசிய கூடைப்பந்து (3×3) தொடர் நடக்கிறது. அதன் தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. அதில் ஸ்ரீகலா ராணி, அனிஷா, காவ்யா, புஷ்பா ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 20-13 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறியது.
Similar News
News October 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 14, புரட்டாசி 28 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:31 AM -9:00 AM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: தேய்பிறை அஷ்டமி விரதம் ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.
News October 14, 2025
பிஹார் தேர்தல்: எதிர்க்கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு நிறைவு

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. RJD 135, காங்கிரஸ் 61, கம்யூனிஸ்ட் கட்சிகள் 29 – 31, VIP 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில் வரும் நவ.6-ல் தொடங்க உள்ளது.
News October 14, 2025
கேப்டனை நீக்க சொல்லி போர்க்கொடி

இந்தியாவில் நடைபெறும் மகளிர் ODI WC-ல் இந்திய அணி சொதப்பி வருகிறது. AUS, SA அணிகளுடனான அடுத்தடுத்த தோல்விகளால் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21, 19, 9, 22 என சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி வருகின்றனர். அரையிறுத்திக்குள் நுழைய அடுத்துள்ள 3 போட்டிகளும் இந்திய அணிக்கு முக்கியமானவை.