News February 13, 2025
சிறந்த அணியுடன் தான் தோற்றோம்: பட்லர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739409705739_1173-normal-WIFI.webp)
ODI தொடரில் IND அணி ஒயிட் வாஷ் செய்த நிலையில், ஒரு சிறந்த அணியால் தான் தாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். தங்களுடைய அணுகுமுறை சரிதான், அதில் எந்த தவறும் இல்லை எனவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி தங்களுக்கு பல சவால்களை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2025
பழம்பெரும் பாடகர் ‘பிரபாகர் கரேகர்’ காலமானார்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739431978518_347-normal-WIFI.webp)
இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர்(80) நேற்று மும்பையில் காலமானார். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை தொடங்கிய இவர், தன் குரலினிமையால் ரசிகர்களை கவர்ந்தார். பிரபலமான பல கலைஞர்களுக்கு இவர் குருவாகவும் இருந்துள்ளார். பாடுவது மட்டுல்லாமல், இந்துஸ்தானி இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றது, சர்வதேச நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள் எனப் பல வழிகளில் இவர் பங்காற்றியுள்ளார்.
News February 13, 2025
நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739441055545_1142-normal-WIFI.webp)
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
News February 13, 2025
சுப்ரீம் கோர்டில் ஓபிஎஸ் முறையீடு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1733393715617_1241-normal-WIFI.webp)
அதிமுக பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும் என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.