News February 13, 2025
புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739408775122_1241-normal-WIFI.webp)
புதிய வருமான வரி மசோதா பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், 536 பிரிவுகள் உள்ளன. தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ள நிலையில், புதிய சட்டத்தில் இது 16ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதேநேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆய்வுக்காக JPCக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 13, 2025
பெண் நடத்துநர்களாக 150 CM உயரம் போதும்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739439471309_1142-normal-WIFI.webp)
பெண் நடத்துநர்களாக 160 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என்று அரசு ஏற்கெனவே தகுதி நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அதனை தற்போது 150 செ.மீ.ஆக குறைத்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடத்துநர் பணியிடங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர ஏதுவாக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அரசு பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் பெண் வாரிசுகளுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
News February 13, 2025
10வது போதும்.. மத்திய அரசில் 21,000 காலிப்பணியிடங்கள்!!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_112024/1730850732688_1173-normal-WIFI.webp)
இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழகத்தில் மட்டும் 2,292 கிராம அஞ்சல் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <
News February 13, 2025
வயநாடு சம்பவம்: வருத்தத்தில் பிரியங்கா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739424217414_1328-normal-WIFI.webp)
கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.