News March 28, 2024
மைசூர்-கடலூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில்

மைசூா் – சென்னை விரைவு ரயில் கடலூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் ரயில்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதால் ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்களும் எந்த சிரமமும் இன்றி கோடையை கழிப்பர் , ரயில்வேக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 19, 2025
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிட்டா அடங்கல், வங்கி கணக்கு ஆதார் அட்டைகளை கொண்டு இ -சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். மக்காச்சோளத்துக்கு வருகின்ற 31-ம் தேதியும், சம்பா நெல், பருத்தி, உளுந்துக்கு நவம்பர் 15-ம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
கடலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

கடலூர் மாவட்டத்தில் 37 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
கடலூர்: பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகள் ராதிகா (35). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ராதிகாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் ராதிகா நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.