News February 12, 2025
மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்: டிரம்ப் வார்னிங்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739375943387_1204-normal-WIFI.webp)
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக் கைதிகளை வரும் 15ஆம் தேதி பகல் 12 மணிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும். காசாவை நாங்கள் வாங்கப் போவதில்லை. எடுத்துக்கொள்ள போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2025
குவியும் வங்கதேசத்தினர்.. தமிழகத்திற்கு புதிய ஆபத்து!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739407926057_1241-normal-WIFI.webp)
திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் சட்டவிரோதமாக ஏராளமான வங்கதேசத்தினர் நுழைந்துள்ளனர். திருப்பூரில் மட்டும் கடந்த சில வாரங்களில் 50க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இவர்கள் அசாம் வழியாகத் தமிழகத்தில் நுழைந்தது தெரியவந்துள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி ஊடுருவும் இவர்களை முறைப்படுத்தாவிட்டால் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என பலரும் எச்சரிக்கின்றனர்.
News February 13, 2025
ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு இதை செய்தால் ..!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739365729297_1231-normal-WIFI.webp)
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க முடியாதவர்கள் குறைந்தது, 30 நிமிடமாவது நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் குறைவதாகக் கூறுகிறார்கள். ஆனால், நடைப்பயிற்சியின் போது, கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.
News February 13, 2025
முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24ம் தேதி திறப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739406551993_785-normal-WIFI.webp)
TNல் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24ம் தேதி CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என CM அறிவித்திருந்தார். B.Pharm, D.Pharm (அ) அவர்கள் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.