News February 12, 2025

தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

image

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!

Similar News

News February 13, 2025

முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24ம் தேதி திறப்பு

image

TNல் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24ம் தேதி CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என CM அறிவித்திருந்தார். B.Pharm, D.Pharm (அ) அவர்கள் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

News February 13, 2025

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்

image

RBI புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ₹50 நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதனை RBI உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் EX ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய் பெயரில் புதிய ₹50 நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளது. அதேநேரம், தற்போதுள்ள ₹50 நோட்டுகளும் செல்லுபடியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது.

News February 13, 2025

கமலை சந்தித்த சேகர்பாபு.. இதுதான் காரணம்?

image

DMK கூட்டணியில் உள்ள மநீம தலைவர் கமலை அமைச்சர் சேகர்பாபு நேற்று திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. 2021 தேர்தல் கூட்டணியின்போது கமலுக்கு மாநிலங்களவை MP பதவி வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி, விரைவில் கமல் MPயாக தேர்வுசெய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், வைகோவுக்கு MP பதவி மீண்டும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

error: Content is protected !!