News February 12, 2025

தலைமை அர்ச்சகர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

image

அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் மறைவுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்துமதச் சடங்குகள், வேதங்களில் சிறந்தவரான அவர், தன் வாழ்நாளை ராமரின் சேவைக்காக அர்ப்பணித்தார். ஆன்மிக மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக்கூரப்படும் என்று உருக்கமாக தன் இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 13, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 177 ▶குறள்: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். ▶ பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

News February 13, 2025

சிசுவின் உடலை கடித்து தின்ற நாய்கள்!

image

உ.பி. மாநிலம் லலித்பூர் பெண்கள் அரசு ஹாஸ்பிட்டலில் நேற்று முன்தினம் சங்கீதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களிலேயே இறந்தது. இந்நிலையில், சிசுவின் உடலை எரிக்க ரூ.200 தருமாறு தந்தை அகிலேஷிடம் ஊழியர் ஒருவர் கேட்க, அவரும் பணம் கொடுத்துள்ளார். ஆனால், அவரோ சிசுவின் உடலை குப்பையில் வீசியுள்ளார். இந்நிலையில், சிசுவின் உடலை தெருநாய்கள் கடித்து பிய்த்து தின்றுள்ளன. துளியும் மனசாட்சி இல்லையா?

News February 13, 2025

ஐபிஎல்.. RCB ரசிகர்களுக்கு நற்செய்தி!

image

RCB ரசிகர்களே தயாராகுங்கள். அணியின் கேப்டன் யார் என்பதை இன்று காலை 11.30 மணிக்கு RCB அறிவிக்க உள்ளது. கடந்த சீசனில் கேப்டனாக இருந்த டு பிளெசிஸை அந்த அணி விடுவித்துள்ளதால், அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது கோலி கேப்டனாக அறிவிக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கோலி இல்லையென்றால் க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் லிஸ்டில் உள்ளனர்.

error: Content is protected !!