News February 12, 2025
அமைச்சராவதில் SB-க்கு ஏன் இந்த அவசரம்? SC கேள்வி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739364441220_1031-normal-WIFI.webp)
ஜாமின் கிடைத்தவுடனே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன் என்று அவர் தரப்பிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர் மீண்டும் அமைச்சரானதை எதிர்த்து வித்யா குமார் என்பர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கும் போது அமைச்சராக தொடர்வது தார்மீகமா? அமைச்சராக தொடர SB விரும்புகிறாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
Similar News
News February 13, 2025
TN பாஜக தலைவராக தொடர முடியாது: அண்ணாமலை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1735488788663_1204-normal-WIFI.webp)
திமுகவை அகற்றாமல் தனது அரசியல் பயணம் நிறைவடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக தலைவராக மீண்டும் தொடர முடியாது என்பது தனக்கு தெரியும் என்றும், ஆனால் இங்கிருந்து செல்லும் முன் அண்ணா அறிவாலயத்தில் கடைசி செங்கல்லையும் உருவாமல் விடமாட்டேன் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சு, அவர் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்பதையே உறுதி செய்வதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
News February 13, 2025
தினம் ஒரு திருக்குறள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739381240610_785-normal-WIFI.webp)
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வெஃகாமை ▶குறள் எண்: 177 ▶குறள்: வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். ▶ பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.
News February 13, 2025
சிசுவின் உடலை கடித்து தின்ற நாய்கள்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739374655929_1204-normal-WIFI.webp)
உ.பி. மாநிலம் லலித்பூர் பெண்கள் அரசு ஹாஸ்பிட்டலில் நேற்று முன்தினம் சங்கீதா என்பவருக்கு பெண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களிலேயே இறந்தது. இந்நிலையில், சிசுவின் உடலை எரிக்க ரூ.200 தருமாறு தந்தை அகிலேஷிடம் ஊழியர் ஒருவர் கேட்க, அவரும் பணம் கொடுத்துள்ளார். ஆனால், அவரோ சிசுவின் உடலை குப்பையில் வீசியுள்ளார். இந்நிலையில், சிசுவின் உடலை தெருநாய்கள் கடித்து பிய்த்து தின்றுள்ளன. துளியும் மனசாட்சி இல்லையா?