News February 12, 2025
9 கிரகமும் ஒன்றாய் காண…
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737512046618_1153-normal-WIFI.webp)
பிள்ளையார்பட்டி பாடல் வரிகளைப் போல, 7 கோள்களையும் (பூமியைத் தவிர) ஒரே நேரத்தில் வானில் பார்க்கும் அரிய வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆம், பிப்ரவரி 28ஆம் தேதி இரவு அனைத்துக் கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றும். இதில், யுரேனஸ், நெப்டியூன் தவிர மற்ற 5 கோள்களையும் வெறும் கண்களாலே பார்க்கலாம். அவை இரண்டையும் பார்க்க டெலெஸ்கோப் தேவை. இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும்.
Similar News
News February 13, 2025
தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது: தமிழிசை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_82024/1724147305814-normal-WIFI.webp)
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் வென்று, தமிழகத்தை காவி நிச்சயம் ஆளும் என்றார். தமிழகத்தில் பெரியார் தமிழை வளர்க்கவில்லை என்றும், பெரியாழ்வார் வளர்த்த தமிழ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்துக்கான ஆட்சியை அகற்றிவிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்காக நடைபெறும் ஆட்சி விரைவில் அமையும் என்றும் கூறியுள்ளார்.
News February 13, 2025
எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்கலாம்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739378189923_1246-normal-WIFI.webp)
சராசரி மனிதனுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் தேவை. ஆனால், 24 மணி நேரத்திற்கு மேல் தூங்காமலே இருப்பது மிகவும் சிரமம். தொடர்ந்து 36 மணி நேரங்கள் தூங்காமல் இருந்தால், தீவிர பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் டாக்டர்கள். இருப்பினும், 1963ஆம் ஆண்டு ராண்டி கார்ட்னர் என்பவர் தொடர்ந்து 11 நாள்கள் தூங்காமல் இருந்தார். ஆனால், இது விபரீத முயற்சி என்கிறது மருத்துவ உலகம்.
News February 13, 2025
கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739176327886_1241-normal-WIFI.webp)
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருவை கலைத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு குழந்தையை வளர்க்கும் பக்குவம் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிறுமியை கருவை கலைக்க விடாமல் செய்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று கூறி கருவை கலைக்க உரிமையளித்தனர்.