News February 12, 2025
மொபைல எடுங்க… 14417 நம்பர தட்டுங்க!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737997258043_347-normal-WIFI.webp)
பள்ளிகளில் மாணவ- மாணவியர் பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு ஆளானால், 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புகார் அளிப்பவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்றும், மாணவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளிகளில் பாலியல் புகார் எழுந்துள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2025
இது நியாயமா மீடியா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737228134860_1031-normal-WIFI.webp)
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களிடத்தில் கூட “விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா?” என்று கேள்வி கேட்பதை ஊடகத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோன்ற கேள்வியை இன்று பிரேமலதாவிடம் கேட்டபோது, ”அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருட கட்சி. எங்களிடம் கேட்கக்கூடாது” என்று நறுக்கென பதில் கொடுத்தார். நியாயமாக இந்தக் கேள்வியை புதிதாக கட்சித் தொடங்கியவர்களிடம்தானே கேட்க வேண்டும்!
News February 12, 2025
மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும்: டிரம்ப் வார்னிங்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739375943387_1204-normal-WIFI.webp)
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக் கைதிகளை வரும் 15ஆம் தேதி பகல் 12 மணிக்குள் ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும். காசாவை நாங்கள் வாங்கப் போவதில்லை. எடுத்துக்கொள்ள போகிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News February 12, 2025
பயங்கரவாதம் இல்லனா விளையாடலாம்: தவான்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739364261092_1328-normal-WIFI.webp)
பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் டீம் விளையாடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. தற்போது, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாஜி வீரர் ஷிகர் தவான் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதம் ஓயாத வரை அங்கு கிரிக்கெட் விளையாடக்கூடாது என கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு கருதி அரசின் முடிவுக்கு நிச்சயம் ஆதரவு தர வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார் தவான்.