News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News September 15, 2025
அதிமுக மீண்டும் ஒன்றிணைவது உறுதி: சசிகலா

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது சிரமம், ஆனாலும் அதை செய்து முடிப்பேன் என சசிகலா திட்டவட்டமாக கூறியுள்ளார். MGR மறைவுக்கு பிறகு ஏற்பட்ட பிளவை மீண்டும் இணைத்த அனுபவம் தனக்கு உள்ளது என்றார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும், ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்ற அண்ணாவின் வழியில் நடக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News September 15, 2025
School Fees-க்கு ₹1 லட்சம் வரை கொடுக்கும் முக்கிய திட்டம்!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை கொடுக்கிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற https://scholarships.gov.in/ – ல் அப்ளை பண்ணுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 15, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

இன்று முதல் செப்.19 வரை கனமழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தி.மலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (17-ம் தேதி) ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் 2 நாள்கள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.