News March 28, 2024
காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News October 29, 2025
திருவள்ளூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதில் கும்மிடிப்பூண்டியில் அதிகபட்சமாக 33 மிமீ, பொன்னேரி 26 மிமீ, ஆவடி 31 மிமீ, திருத்தணி 23 மிமீ, பூண்டி 22 மிமீ, திருவள்ளூர் 20 மிமீ, தாமரைப்பாக்கம் 23 மிமீ, சோழவரம் 19 மிமீ, திருவாலங்காடு 18 மிமீ, ஊத்துக்கோட்டை 14 மிமீ, பூந்தமல்லியில் 11 மிமீ மற்றும் ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
News October 29, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

திருவள்ளூர் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள்<


