News February 12, 2025

இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் ஜாக்பாட் தான்?

image

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிப்லாந்த்ரி கிராமத்தில் ஒரு தனித்துவமான வழக்கம் உள்ளது. ஊரில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போது, 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். மேலும், அக்குழந்தை 21 வயதை அடையும் போது அவளின் பாதுகாப்பிற்காக, கிராமவாசிகள் இணைந்து ₹21,000, பெற்றோர்கள் ₹10,000ஐ fixed depositல் போடுகிறார்கள். இப்பழக்கத்தை 2006ல், ஊர் தலைவராக இருந்த ஷியாம் சுந்தர் கொண்டு வந்துள்ளார்.

Similar News

News April 7, 2026

திருமணம் சர்ச்சை.. த்ரிஷா பரபரப்பு பதிவு!

image

சினிமாவிலிருந்து விலகும் முடிவில் த்ரிஷா உள்ளதாக SM-களில் தகவல் பரவியது. இந்நிலையில், கோபத்துடன் த்ரிஷா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகிறது. அதில், நான் சினிமாவை விட்டுவிட்டேன். ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன், 2 வயதுடைய 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேன் போல. இன்றைய பொய் கதைக்கான அளவு போதுமா? (அ) இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்று கேட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News April 7, 2026

தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

image

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.

News April 7, 2026

வேறொருவருடன் மனைவி.. கோர்ட் அனுமதியால் பரபரப்பு

image

தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார், கணவர். இதன் மீதான விசாரணையில், எனக்கு 19; கணவருக்கு 40. என்னால் அவருடன் வாழ முடியாது. நான் விரும்பியவருடனே வாழ விரும்புகிறேன் என மனைவி வாதிடுகிறார். இதனை ஏற்ற ம.பி., HC, விரும்பாத திருமண உறவிலிருந்து வெளியேறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ பெண்ணுக்கும் உரிமை உண்டு என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!