News February 12, 2025
ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர் மரணம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739336767660_1241-normal-WIFI.webp)
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புர்காஜியைச் சேர்ந்த ரஜத்(25), மனு என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் விஷம் குடித்த நிலையில், ரஜத் உயிரிழந்தார். நல்ல மனிதனை சாதி கொன்றுவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 12, 2025
புதிய மைல்கல்லை எட்டிய ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739357265037_1031-normal-WIFI.webp)
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது.
News February 12, 2025
மாணவர்களை நிர்வாணமாக்கி ராகிங் கொடுமை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739347905851_1231-normal-WIFI.webp)
கேரளா, கோட்டயத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்துள்ள ராகிங் கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்சிங் 1st yr மாணவர்களை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள், அவர்களை நிர்வாணப்படுத்தியும், அந்தரங்க உறுப்பில் தம்புள்ஸ் தொங்கவிட்டும், காம்பஸால் குத்தியும் கொடுமை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோ எடுத்தும் பிளாக்மெயில் செய்துள்ளனர். மாணவர்கள் புகாரால், தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.
News February 12, 2025
தமிழகத்தில் SC, ST மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739351702878_1173-normal-WIFI.webp)
தமிழகத்தில் 2020-22 கால கட்டங்களில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது, லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டு 1,274 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அது 2021ஆம் ஆண்டு 1,377ஆக அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில், 15,368 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.